NARUVI MOVIE REVIEW

NARUVI MOVIE REVIEW :

கல்வியையும், ஆசிரியர்களையும் பெருமைப்படுத்தும் படம். ஆனால் அதை ஒரு திரில்லராக சொல்லியிருப்பதுதான் படத்தின் ஆகப்பெரிய ஆச்சரியம்.

கல்வி தொடங்கி கதை ஆரம்பிக்கவில்லை. ஆனால் காட்டுக்குள் கதை ஆரம்பிக்கிறது. வனத்தை நம்பி வாழும் ஆதிவாசிகளின் தொன்மை நம்பிக்கைகளைச் சொல்லி படம் தொடங்குகிறது.

இன்னொரு பக்கம் நகரில் மிகப்பெரிய காபித் தூள் தயாரிக்கும் நிறுவனம் அதன் வெளிநாட்டு ஏற்றுமதிக்காக அந்த மலைப்பகுதியில் காபி பயிரிடும் தோட்டங்களை அதிகரிக்க எண்ணுகிறது.

அதற்கான பணிகளுக்காக அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர்கள் குழு காட்டுக்குள் பயணிக்கிறது. அதை வழிநடத்திச் செல்லும் இளம்பெண் அந்த வேலையை விட, அவர்களுக்கு உதவி செய்ய வந்த ஆதிவாசி பெண்ணின் முறைமாமன் பற்றி அறியவே அதிக ஆர்வம் காட்டுகிறார்.

அது ஏன் என்பது படத்தின் சஸ்பென்ஸ். அவர் தேடும் ஆதிவாசிப் பெண்ணின் முறை மாமன் அதே மலைக் காட்டுக்கு தினசரி வந்து ஆதிவாசி குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தரும் ஆசிரியராக இருந்திருக்கிறார். திடீரென்று மாயமான அவரைக் கண்டுபிடிக்கும் நோக்கம் படத்தின் இரண்டாம் பாதியில் பிரதானமாக ஆக்கப்படுகிறது.

பாடம் நடத்தி வந்த ஆசிரியர் என்ன ஆனார், காபித் தோட்ட விரிவாக்கம் என்ன ஆனது என்பதெல்லாம் மீதிக் கதை.

RATINGS : 3.5/5

PRO R MANI MADHAN

Leave a Response