1991ஆம் ஆண்டில் புவனாலயம் என்ற தனது அரண்மனையில், நோய் வாய்ப்பட்ட அரசு குடும்ப வாரிசாக இருக்கிறார் ராமப்பா ராவ் பஹதூர். அவரது மனைவி ரேணுகா பல ஆண்டுகளாக அவருடன் பேசாமல் வேறொரு அறையில் இருக்க, அச்சம்மா என்ற பணிப்பெண் வீட்டு வேலைகளை செய்து வருகிறார்.
ஒருநாள் ராமப்பாவின் உடல்நிலை சரியில்லை என்று தகவல் கிடைக்க, அவரது நண்பரான டாக்டர் ஆச்சாரி அரண்மனைக்கு வருகிறார்.

அங்கு மனநலம் பாதிக்கப்பட்ட நபர் போல் பேசும் ராமப்பா, தனது மனதினை அரிக்கும் சந்தேகத்தை அவர் முன் வைக்கிறார். அதற்கு மழுப்பலாக ஆச்சாரி பதில் அளிக்க, ராமப்பா தான் செய்த ஒரு விஷயத்தை கூறி சில பொருட்களை முன் வைக்கிறார்.
அதனைப் பார்த்து ஆச்சாரி அதிர்ச்சியடைய, எப்படியாவது எனக்குள்ள சந்தேகத்தை தீர்த்து வைக்க வேண்டும் ராமப்பா கூறுகிறார். அவரது சந்தேகம் தீர்ந்ததா? அவரது மனைவி ஏன் பல ஆண்டுகளாக பேசாமல் இருக்கிறார்? போன்ற கேள்விகளுக்கு பதில்தான் மீதிக்கதை.
மொத்தத்தில் இந்த ராவ் பஹதூர் ஆட்சி செய்துவிட்டார். சைக்கோலாஜிக்கல் டிராமா விரும்பிகள் கண்டிப்பாக ரசிக்கலாம்.
Ratings : 3.5/5
Pro : S2 Media




