1970 காலகட்டங்களில் கதை தொடங்குகிறது.. ஓர் அடர்ந்த காட்டுப் பகுதியில் இருக்கும் காவல் நிலையத்திற்கு மாற்றலாகி வருகிறார் இசக்கி கார்வண்ணன்.. இவர் ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்.. அங்கு குற்றங்களே நடைபெறவில்லை என்பதால் வழக்குகள் எதுவும் இல்லை.. ஆனால் தினம் ஒரு வழக்கு வேண்டும் என கட்டளையிடுகிறார் இன்ஸ்பெக்டர்.
அந்த சமயத்தில் அங்கு ஒரு வழக்கு வருகிறது.. அந்த காட்டுப் பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு பாடம் நடத்த வந்த எம்எல்ஏவின் தம்பியும் ஆசிரியருமான பிரவீன் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்..
ஒரு ஆசிரியரை கொல்ல என்ன காரணம்.? அவர்களின் நோக்கம் என்ன.? இதுவரை வழக்கு இல்லாத அந்த இடத்தில் எப்படி கொலை நடந்தது? என்பதையெல்லாம் விசாரிக்கிறார் இசக்கி. அதன் பிறகு நடந்தது என்ன என்பதே மீதிக்கதை..
Ratings: 3/5
Pro : A. John




